Friday 16 August 2013

தெற்கே தேவேந்திரனுக்கு தேள்கடித்தால் வடக்கே வன்னியனுக்கு நெறிகட்டும்


அடையாள அரசியலினாலும் தாரளமயத்தாலும் உருவான இந்தப் போக்கு அரசியல்கட்சிகள் மீது பாதகமான தாக்குதலைத் தொடுக்கிறது. இதுவரையிலும் செயல்பட்டு வந்த சாதிச் சங்கங்களில் தொய்வு ஏற்பட்ட சமயத்தில் கொடியங்குளம் தேவேந்திரர்கள் மீது 1995ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட வன்முறைக்குப் பின்னர் அவர்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்த புதிய தமிழகம் கட்சியில் அம்மக்கள் இணைந்தனர். தற்போது பாமகவின் பொதுச் செயலாளர் பதவியிலிருக்கும் தேவேந்திரர் சாதியைச் சேர்ந்த வடிவேல் ராவணன் பல வருடங்களுக்கு முன் அக்கட்சியிலிருந்து வெளியேறியபோது பாமகவினால் தங்கள் சாதிக்கு பலன் ஏதும் கிடைத்துவிடவில்லை என்பதை, ‘சாறை உறிந்துவிட்டு சக்கையை தேவேந்திரர் மீது எறிந்தது பாமக’ என்று விமர்சித்தார்.26 தேவேந்திரர் சங்கத்தின் முதுகெலும்பாக இருந்தவர்கள் பாமகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட போதிலும் அதில் தொங்கு சதையாக இருக்க விரும்பாததால் அக்கட்சியிலிருந்து விலகிவிட்டனர். தற்போது பாமக தலித் வெறுப்பரசியலை கையிலெடுத்ததால் பாமகவின் திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பில் இருந்த தேவேந்திரர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர்.27 ஒரு சாதிக் கட்சியிலிருந்து மாற்றுச் சாதியைச் சேர்ந்தவர்கள் விலகும்போது ஏற்படும் சிக்கல்களைவிடவும் அதே சாதியைச் சேர்ந்தவர்கள் விலகும்போதுதான் பெரும் மோதல்கள் உருவாகின்றன. 

மேலும் படிக்க : 

http://www.kalachuvadu.com/issue-164/page16.asp

No comments:

Post a Comment