Friday 16 August 2013

சாதி கட்சிகள்...

சாதி கட்சிகள்...

தமிழக அரசியல் அரங்கில் ஆளும் கட்சி அல்லது எதிர் காட்சிகளில் எண்ணற்ற பிரதிநிதிகளாக தன் சாதிகாரர்களை M.LA க்களாகவும் MP க்களாகவும் அமைச்சர்களாகவும் கொண்ட சாதிகள் எல்லாம் தன் சாதிக்கென்று தன் சாதி மக்களின் பலத்தை மட்டுமே நம்பி ஆரம்பித்த சாதி கட்சிகலான நாடாளும் மக்கள் கட்சி (தேவர்), மக்கள் தமிழ் தேசம் (கோனார்), கொங்கு முன்னேற்ற கழகம் (கவுண்டர்), போன்ற அக்கட்சிகள் எல்லாம் இருந்த இடமும் தெரியவில்லை போன தடமும் தெரியவில்லை மற்ற சாதி கட்சிகளான விடுதலை சிறுத்தைகளும் (பறையர்), பாட்டாளி மக்கள் கட்சியும்(வன்னியர்) கூட அந்த சமூக மக்களின் ஆதரவை இழந்து அழிவை நோக்கியே பணித்துக்கொண்டிருக்கிறது என்பதை நாம் கண்கூடாக பார்துக்க்கொண்டிருக்கிறோம். இன்னும் பல சிறு சாதிகளின் கட்சிகள் அடையாளம் இன்றி வந்த வேகத்தில்அழிந்த கதைகளையும் யாம் அறிவோம்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை விட பொருளாதராத்தில் அரசியலில் சமூகத்தில் உயர்நிலையில் இருக்கும் பறையரை தவிர்த்து மற்ற சாதிகளின் ஒருங்கினைந்த ஒரே அணி என கூறிக்கொண்ட கட்சிகளே துடைத்து தூக்கி எறியப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த தமிழக அரசியல் களத்தில் எம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் எத்தனை கட்சிகள் என்று எண்ணி சொல்ல முடியவில்லை அவ்வளவு கட்சிகளை வைத்துகொண்டு ஆளாளுக்கு அவர் ஆதரவாளர் இவர் ஆதரவாளர் என மோதிக்கொள்ளும் இந்த கேடுகெட்ட சமுதாயதிற்கு எப்படி அரசியலில் அங்கீகாரம் கிடைக்கும் சொல்லுங்கள் சொந்தங்களே...

படிக்காத பாமரன் தான் மோதுகிறான் ஆதரவாளன் என்ற பிரிவினையை உருவாக்கி ஆனால் அவர்களிற்கு ஒரு படி மேலாய் மெத்த படித்த மேதாவிகளாய் சண்டியர்கலாய் காலரை தூக்கி திரியும் பல எம் சமூக சிந்தனையுள்ள படித்த பண்பாளர்களளான எதிர்வரும் காலங்களில் எம் சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிப்பவர்களான பல மாற்றத்தை உருவாக்க வேண்டியவர்களான எம் சமூக அறிவு ஜீவிகள் எல்லாம் எம் சமூகத்தை ஒற்றுமைபடுத்தி ஒருநிலைப்படுத்த முயலாமல் எம் சமூகத்திற்குள் சிலரின் ஆதரவாளர்கள் என மேலும் பிரிவினையை தூண்டுவது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்கள் சொந்தங்களே... 

40 வயதை கடந்தவர்கள் நாசமாய் போனாலும் பரவா இல்லை இருபது வயதை எட்டாதவர்கள் இருக்கட்டும் அப்படியே இதற்க்கு இடைப்பட்ட வயதினர் எல்லாம் சமூக சிந்தனையோடு எம் சமூகமும் மதிக்கப்படும் சமூகமாக மாற வேண்டும் அரசியலில் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு நல்ல குறிக்கோள்களை நெஞ்சில் சுமந்து கொண்டு ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாய் இணைந்தாலே போதும் இருக்கும் தலைவர்களை அமைச்சர்களாக்கலாம் அப்படி இல்லையா எம் சமூகத்தில் எண்ணற்ற அமைச்சர்களை உருவாக்கலாம்.

100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவை வல்லரசாக்குகிறேன் என்றார் விவேகாந்தர் இந்தியாவை வல்லரசாக்கவே 100 பேர் போதும் என எண்ணும் போது எம் சமூகத்தை வல்லரசாக்க எத்துனை பேர் வேண்டும்? சிந்தனை திறனுள்ள சொந்தங்கள் உங்கள் பகுதிகளில் நீங்களே இணைந்து சமூக பணியாற்ற தொடங்குங்கள் யாரையும் எதிநோக்காமல் எந்த வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செயல்பட்டீர்கலானால் எதிர் வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் நீங்கள் ஆற்றிய சமுதாய பணிக்கான வினைபலன் பிரதிபலிக்கும் அது தான் எம் சமூகத்திற்கு கிடைக்கபோகும் முதல் வெற்றி. தொடங்குங்கள் நண்பர்களே இன்றே உங்கள் சமுதாய பனியனை எதிவரும் காலம் எமதாகட்டும். 

“Everything is doable in this world” மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றத்தையே மாற்றும் திறன் எம் குல இளைஞர்களுக்கு இருக்கிறது என்பதை உறுதிபடுத்த இன்றிலிருந்தே துவங்குங்கள் உங்கள் சமுதாய பணியை மாறும் எல்லாமே மாறும் நாளைய தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிப்பவர்கள் நாமாக இருப்போம் எல்லா கட்சிகளின் அசைக்க முடியாத பிரதிநிதிகளாய் எம் சமுதாய சொந்தங்கள் உருவெடுக்கும் போது மற்ற சாதிகளில் எப்படி அந்த சாதியின் கட்சிகள் எல்லாம் காணாமல் போனதோ அது போல் எம் சமூகத்திலும் நிகழும் அன்று எம் சமூகம் அரசியல் அரங்கில் அசைக்க முடியா சக்தியாக திகழும். 

இணைய தொடங்குங்கள் இன்றே ஆளும் கட்சிகளான ஆ.தி.மு.க - தி.மு.க, காங்கிரஸ் – பி.ஜே.பி போன்ற முதுபெரும் ஆளும் கட்சிகளில் அப்போது தான் ஆளும் சக்தியாக உருவெடுக்க முடியும். எல்லோரும் சொல்லுவார்கள் எம் சமூக சொந்தங்களை யாரும் ஏற்றுக்கொலாமல் ஒதுக்குவார்கள் என்று இன்று இணையபோகும் நீங்கள் காட்டுங்கள் மாற்று சமுகாத்தானுக்கும் எம் சமூகத்தின் குறுகிய மனப்பான்மை கொண்டோருக்கும் நாம் எவ்வளவு பெரிய ஆதிக்க சக்தியென்று.


-- ராம் மள்ளர் 

No comments:

Post a Comment